Sunday, May 23, 2010

புதிய கீதை

எது கிடைத்ததோ அது
நன்றாகவே கிடைத்தது எது கிடைக்கவில்லையோ
அது உன் நன்மைக்காகவே கிடைக்கவில்லை

எதை நீ கேட்காமலிருந்தாய்
உன் நோக்கப்படி கிடைப்பதற்கு
எதற்கு நீ ஆசைப்படாமலிருந்தாய்
அது நியாயமாய் கிடைப்பதற்கு

எது இன்று கிடைத்ததோ
அது நாளையே உனக்கு அலுத்துவிடும்
அடுத்த நாள் வெறுத்து விடும்

கிடைப்பதன் அருமை அது
கிடைக்கும் நொடி வரை தான்
அடுத்த நொடி நீ
வேறொன்றுக்கு ஆசைபடுவாய்

ஆகவே கேட்க்காமலிறு அல்லது
இருப்பதை கொண்டு சந்தோசப்படு!

இதுவே கிடைப்பதின் நியதியும்
பெறுவதின் சாராம்சமும் ஆகும்...

சம்பவாமி யுகே! யுகே!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home